உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வேகவதி ஆக்கிரமிப்பு வீடுகளுக்குள் தாமல் ஏரி உபரி நீர் புகும் அபாயம்

வேகவதி ஆக்கிரமிப்பு வீடுகளுக்குள் தாமல் ஏரி உபரி நீர் புகும் அபாயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலங்கள் இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளன. அதில் முதன்மையானதாக, காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் உள்ள, 1,400க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. ஆக்கிரமிப்பு வேகவதி ஆற்றுக்குள், 30 ஆண்டுகளுக்கு மேலாக, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடுகளால், ஆறு கால்வாய் போல காட்சி அளிக்கிறது. ஆற்றுக்குள் வீடுகள் மட்டுமல்லாமல், கடைகள், மரம் அறுக்கும் ஆலை போன்ற வணிக ரீதியிலான ஆக்கிரமிப்புகளும் ஏராளமானதாக உள்ளன. ஆக்கிரமிப்பாளர்களுக்கு, கீழ்கதிர்பூர் கிராமத்தில், 200 கோடி ரூபாய் மதிப்பில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள், 2019ல் திறந்த பின்னும், அவை அப்படியே உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற, 10 ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டு, கீழ்கதிர்பூரில் மாற்று இடம் கட்டப்பட்டது. வேகவதி ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்யாததால், மற்ற பயனாளிகளால், அந்த கட்டடம் நிரம்பியது. ஆக்கிரமிப்பாளர்களு க்கு மாற்று இடம் கட்டி தரப்பட்டும், அவர் களை காலி செய்ய வைக்க வேண்டிய, மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், நடவடிக்கை இன்றி அலட்சியம் கா ட்டுவதாக நகரவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றாததால், தி.மு.க., அரசு அமைந்த பின், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ஆறு முழுமையாக மீட்டெடுக்கப்படும் என, எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், தி.மு.க., அரசு அமைந்து நான்கு ஆண்டுகளான நிலையில், இதுவரை நடவடிக்கை எடுக்காமல், ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை சமயத்தில், குடியிருப்பவர்களை மீட்டு முகாம்களில் தங்க வைப்பது தொடர்கிறது. அச்சம் கடந்த 2021, 2022, 2023 ஆகிய மூன்று ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆக்கிரமிப்பு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, பலரும் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், அந்த வீடுகளை அகற்ற மறுப்பது ஏன் என, பலரும் கேள்வி எழுப்புகின்றனர். தற்போது தாமல் ஏரி முழுமையாக நிரம்பி உபரி நீர், வேகவதி ஆற்றில் கலக்கிறது. தாமல் ஏரியின் உபரி நீர் திறந்துவிடப்பட்டால், அருகில் வசிப்பவர்கள் அச்சமடைவார்கள். அந்த அளவுக்கு, தண்ணீர் ஊருக்குள் பாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தும். தாம ல் ஏரியில் இருந்து கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து உபரி நீர் வெளியேறி வருவதால், வேகவதியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், ஆற்றின் கரையோரங்களிலும், ஆற்றின் நடுவே வீடு கட்டியவர்களுக்கும் வெள்ள அபாயம் உள்ளது. அவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் கொடுத்ததாக தெரியவில்லை. தி.மு.க., ஆட்சி அமைந்த உடனே, சிறு, குறு நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், வேகவதி ஆக்கிரமிப்புகளை நேரில் பார்வையிட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார். ஆனால், வேகவதி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் மவுனமாக உள்ளதால், இம்முறையும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு ஆற்றுக்குள் குடியிருப்பவர்கள் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை