உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு போக்க பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைப்பு

கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு போக்க பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைப்பு

வாலாஜாபாத்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், திருமுக்கூடல், பழவேரி, பினாயூர், அரும்புலியூர், குருமஞ்சேரி, சாத்தணஞ்சேரி, களியப்பேட்டை, காவூர் உள்ளிட்ட ஊராட்சிகள் பாலாற்றங்கரையையொட்டி உள்ளன. இந்த ஊராட்சி கிராமங்களுக்கு பாலாற்று படுகையில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது கோடை துவக்கம் காரணமாக பாலாற்றில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, ஊராட்சிகளுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஆழ்த்துளை கிணறுகளின் நீரூற்றுகள் வற்றி வருகின்றன. கடந்த தினங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், திருமுக்கூடல், பழவேரி, சிறுதாமூர், அரும்புலியூர் ஆகிய ஊராட்சிகளுக்கான பாலாற்று படுகையில் ஆழ்துளை கிணறுகள் வற்றி போனது. இதைதையடுத்து அத்தகைய ஊராட்சிகளில், பாலாற்று படுகையில் நீர் ஊற்றுகள் உள்ள இடம் கண்டறிந்து, அப்பகுதிகளில் புதியதான ஆழ்த்துளை கிணறுகள் அமைக்கும் பணிகளில் ஊராட்சி நிர்வாகத்தினர் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர்.இதுகுறித்து, திருமுக்கூடல் ஊராட்சி தலைவர் மஞ்சுளா கூறியதாவது:திருமுக்கூடல் பாலற்றில் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த ஆழ்த்துளை கிணறுகள் நீரின்றி வற்றி போனது. இதனால், தற்போது பாலாற்றின் மைய பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பைப்புகள் பதித்து அதன் வாயிலாக குடிநீர் வினியோகம் துவக்கி உள்ளோம். வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மழை இல்லாமல் தொடர்ந்து வறட்சி நிலவினால், குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனையை சமாளிப்பது சவாலாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை