இளையனார்வேலுார் - அவளூர் சாலை அகலப்படுத்த வலியுறுத்தல்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் வட்டம், அவளூர் கிராமத்தில் இருந்து, தம்மனுார் கிராமம் வழியாக, இளையனார்வேலூர் செல்லும் இணைப்பு சாலை உள்ளது. சுற்றுவட்டார கிராமத்தினர், இந்த சாலை வழியை பயன்படுத்தி வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.மேலும், இளையனார்வேலூரில் முருகன் கோவில் உள்ளதால், அக்கோவிலுக்கு சுற்றுலா பயணியர் இச்சாலை வழியாக வந்து செல்கின்றனர்.இச்சாலையில், அவளூர் அடுத்த, தம்மனூர் மற்றும் கம்மராஜபுரம் கிராம சாலைகள் மிகவும் குறுகியதாகவும், சில இடங்களில் சிதிலமடைந்தும் காணப்படுகின்றன.குறுகியதான இச்சாலை பகுதிகளில், எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்க இயலாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.காஞ்சிபுரத்தில் இருந்து, இளையனார்வேலுார் வரை தடம் எண்:86 என்ற அரசுப் பேருந்து இச்சாலை வழியாக இயங்குகிறது. குறுகியதான இச்சாலையில், அப்பேருந்து விரைவாக பயணிக்க முடியாததால், மாணவ - மாணவியர், தொழிலாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் குறித்த இடத்திற்கு உரிய நேரத்திற்கு சென்றடைய முடியாத நிலை ஏற்படுகிறது.மேலும், இக்கிராம சாலைகளின் இருபுறமும் விவசாய நிலங்கள் உள்ளதால், விவசாயம் சார்ந்த பணிகளுக்கான டிராக்டர், அறுவடை இயந்திரம் போன்ற வாகனங்கள் இயக்குவதிலும் தொடர்ந்து சிக்கல் உள்ளது.எனவே, அவளூரில் இருந்து, கிராமங்கள் வழியாக இளையனார்வேலூர் செல்லும் இணைப்பு சாலையை அகலப்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியை ர்ந்த வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.