உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சாலையோரத்தில் வைக்கப்பட்டிருக்கும் மின்கம்பங்களால் இடையூறு

 சாலையோரத்தில் வைக்கப்பட்டிருக்கும் மின்கம்பங்களால் இடையூறு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பஞ்சுகொட்டி தெருவில், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரம் வைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் பஞ்சுகொட்டி தெரு வழியாக காமாட்சியம்மன் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், பூக்கடை சத்திரம், புதிய ரயில் நிலையம், செங்கழுநீரோடை வீதி உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். வாகன போக்கு வரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூறாக ஐந்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் குப்பை போல வைக்கப்பட்டுள்ளன. இதனால், சாலையோரம் செல்ல வேண்டிய பாத சாரிகள் மையப் பகுதியில் நடந்து செல்வதால், விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. மேலும், இத்தெருவில் அடிக்கடி போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதோடு, மின்கம்பங்களின் இடையே பதுங்கியுள்ள விஷ ஜந்துக்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் படையெடுப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, பஞ்சுகொட்டி தெருவில், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரம் போடப்பட்டுள்ள மின்கம்பங்களை அகற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ