உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மேனலுார் அரசு பள்ளிக்கு முதலுதவி பெட்டி வழங்கல்

மேனலுார் அரசு பள்ளிக்கு முதலுதவி பெட்டி வழங்கல்

காஞ்சிபுரம்: மேனலுார் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு முதலுதவி பெட்டி மற்றும் மாணவியருக்கான சானிடரி நாப்கின் இன்சினரேட்டர் நேற்று வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த, மேனலுாரில் அறிஞர் அண்ணா மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் மனோகரன், முதலுதவி பெட்டி மற்றும் மாணவியர் பயன்பெறும் வகையில் சானிடரி நாப்கின் இன்சினரேட்டர் இயந்திரத்தை பள்ளி தலைமையாசிரியர் தயாளனிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சாந்தி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை