மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நேற்று முன்தினம், சிறப்பு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.இந்த மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில், 42 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 10 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.மீதமுள்ள மனுக்கள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என, செயற்பொறியாளர் சண்முகம் பாண்டியராஜன் தெரிவித்தார்.