காஞ்சி வடக்கு கோட்டத்தில் நாளை மின் குறைதீர் கூட்டம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், மூன்றாவது வியாழக்கிழமை தோறும் காஞ்சிபுரம் வடக்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது.அதன்படி, காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை, காலை 11:00 மணிக்கு நடைபெறும் குறைதீர் கூட்டத்தில், மின் நுகர்வோர் பங்கேற்று, தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.