உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மதுபான தொழிற்சாலையில் தவறி விழுந்து ஊழியர் பலி

மதுபான தொழிற்சாலையில் தவறி விழுந்து ஊழியர் பலி

குன்றத்துார்:குன்றத்துார் அருகே படப்பையில், தனியார் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் மேற்கூரை சீரமைக்கும் பணி, சில நாட்களாக நடந்து வருகிறது.இதில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மூவேந்தன், 25, உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.நேற்று முன்தினம் இரவு, மேற்கூரை அமைக்கும் பணியின் போது, 40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த மூவேந்தன், பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். மணிமங்கலம் போலீசார், மூவேந்தன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி