உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் வரும் 30ல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்

காஞ்சியில் வரும் 30ல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், வரும் 30ம் தேதி, முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற இருப்பதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்ட செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 30ம் தேதி, கலெக்டர் வளாக கூட்டரங்கில் மாலை 3:30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், படைவீரர்கள் மற்றும் படைவீரரை இழந்த மனைவி பங்கேற்கலாம். படைவீரர்களுக்கு உள்ள கோரிக்கைகள், புகார் பற்றி இம்முகாமில், தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை