மேலும் செய்திகள்
நாளை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
26-Jun-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், மாதந்தோறும், கலெக்டர் தலைமையில், நடைபெற்று வருகிறது.அந்த வகையில், ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், நாளை, காலை 10:30 மணிக்கு நடைபெறும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.வேளாண்மை, தோட்டக்கலை, கூட்டுறவு, மின்வாரியம், வருவாய் துறை என, வேளாண் தொடர்பான துறையில் உள்ள பிரச்னைகள் குறித்து கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
26-Jun-2025