உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தொழிற்சாலையில் உணவு புறக்கணிப்பு

தொழிற்சாலையில் உணவு புறக்கணிப்பு

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் இயங்கிவரும் சாம்சங் தொழிற்சாலையில், தொழிலாளர்களுக்கு நெருக்கடி அளிப்பதாக கூறி, தொழிற்சாலை நிர்வாக இயக்குனரை சந்திக்க அனுமதிக்க கேட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மூவரை ‛சஸ்பெண்ட்' செய்து நிர்வாகம் கடிதம் அளித்தது.இதற்கு எதிர்ப்பு தொரிவித்து, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தொழிற்சாலையின் உள்ளே, ஒன்பதாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டதில் இயங்கி வரும் 58 தொழிற்சாலைகளில் உள்ள சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர், நேற்று மதியம் உணவை புறக்கணித்து, சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்ததாக, சி.ஐ.டி.யு., முத்துகுமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை