காதி பவனில் காந்தி நினைவு தினம்
காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் அமுதபடி தெருவில், காதி இந்தியா பவனில், காந்தியின் 77வது ஆண்டு நினைவு நாள் சர்வோதய தினமாக அனுசரிக்கப்பட்டது. இதில், காலை நுாற்பு வேல்வியும், சர்வ சமய பிரார்த்தனையும், சங்க தலைவர் பாஸ்கர் தலைமையில் நடந்தது.தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து காதி பவனில் பணியாற்றும் மேலாளர்கள், ஊழியர்கள் அனைவரும் காந்தியின் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர்.