பணம், பதவி இருந்தால், யாரையும் சாகடிக்கலாமா?
தி.மு.க., பிரமுகர் தனசேகரின் பேரன் சந்துரு தான், என் மகன் சாவுக்கு காரணம். சந்துருவுக்கும் எனது மகனுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நண்பரின் பஞ்சாயத்துக்கு சென்று தான் பிரச்னை ஏற்பட்டது. என் மகன் மீது காரில், இரண்டு முறை இடித்துவிட்டு, சந்துரு சிரித்துள்ளார். பணம், பதவி இருந்தால், யாரை வேண்டுமானாலும் சாகடிக்கலாமா? என் மகனின் சாவுக்கு நியாயம் வேண்டும். என் மகன் ரவுடி இல்லை. அவனை கொன்று, தலைமறைவாக உள்ள சந்துருவை கைது செய்ய வேண்டும். - பூமொழி, நித்தின்சாயின் தாய்.