உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மண் திட்டுகளால் துார்ந்த கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

மண் திட்டுகளால் துார்ந்த கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம், அக்.3-காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு எம்பெருமானார் கோவில் தெருவில், அப்பகுதியில் பெய்யும் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் கான்கிரீட் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இக்கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் மண்திட்டுகளால் துார்ந்த நிலையில் உள்ளது.இதனால், மழைக்காலத்தில் கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர் சாலையில் தேங்கும் நிலை உள்ளது.எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள், செவிலிமேடு எம்பெருமானார் தெருவில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !