உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி புகார் பெட்டி: தெரு பெயர் பலகையைமறைக்கும் செடிகள் அகற்றப்படுமா?

காஞ்சி புகார் பெட்டி: தெரு பெயர் பலகையைமறைக்கும் செடிகள் அகற்றப்படுமா?

கா ஞ்சிபுரம் காமராஜர் வீதியில் இருந்து, சேக்குபேட்டை சாலியர் தெருவிற்கு செல்வோரின் வசதிக்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில், தெருவின் பெயர் எழுதப்பட்ட வழிகாட்டி பெயர் பலகை நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தெரு பெயர் பலகையை மறைக்கும் வகையில் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், வெளியூர்களில் இருந்து சேக்குபேட்டை சாலியர் தெருவில் உள்ள தனியார் பட்டு ஜவுளி கடை, கோவில், தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கு செல்வோர் தெருவின் பெயர் எழுதப்பட்ட வழிகாட்டி பெயர் பலகை செடிகளால் மறைந்துள்ளதால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சேக்குபேட்டை சாலியர் தெரு என எழுதப்பட்டுள்ள வழிகாட்டி பெயர் பலகையை மறைக்கும் செடிகளை அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சி.மணிகண்டன், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை