/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பேருந்து நிலையத்தில் கூரை அமைக்கப்படுமா?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பேருந்து நிலையத்தில் கூரை அமைக்கப்படுமா?
பேருந்து நிலையத்தில் கூரை அமைக்கப்படுமா?
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். செய்யாறு, உத்திரமேரூர், திண்டிவனம், திருப்பதி, செங்கல்பட்டு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்து நிற்கும் இடங்களில் கூரை இல்லாமல் உள்ளது.இதனால், இப்பகுதியில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் வெயிலிலும், மழையிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது.எனவே, பேருந்து நிற்கும் இப்பகுதியில், இருக்கை வசதியுடன் கூரை அமைக்க மாநகரட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.தாமோரன்,காஞ்சிபுரம்.