காஞ்சிபுரம் டி.ஆர்.ஓ., மாற்றம்
காஞ்சிபுரம்: தமிழகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் பணியாற்றும் 17 பேரை பணியிட மாற்றம் செய்து, அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வரும் வெங்கடேஷ், சென்னை மண்டல அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வருவாய் துறை மண்டல அலுவலராக பணியாற்றி வந்த முருகேசன் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.