உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அடிப்படை வசதி இல்லாத கொளத்துார் ஊராட்சி; சாலையில் வழியும் கழிவுநீரால் பகுதிவாசிகள் அவதி

அடிப்படை வசதி இல்லாத கொளத்துார் ஊராட்சி; சாலையில் வழியும் கழிவுநீரால் பகுதிவாசிகள் அவதி

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் கொளத்துார் ஊராட்சி உள்ளது. சோமங்கலம், அமரம்பேடு, கொளத்துார், மேட்டு கொளத்துார், கே.கே. நகர் உள்ளிட்ட பகுதியினர், கொளத்துார் பிரதான சாலை வழியாக, ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிளுக்கு சென்று வருகின்றனர்.தவிர, கொளத்துார் அரசு பள்ளி, வி.ஏ.ஓ., அலுவலகம், அங்கன்வாடி உள்ளிட்டவைகளுக்கு செல்வோர் இந்த வழியே சென்று வருகின்றனர்.இந்த நிலையில், குண்டும் குழியுமான இந்த சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லை. இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் வீட்டு உபயோக கழிவுநீர், பிரதான சாலையில் வழிந்து வருகிறது.சாலையின் நடுவே உள்ள பள்ளங்களில் கழிவுநீர் தேங்குவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.எனவே, கொளத்துார் பிரதான சாலையோரம் வடிகால்வாய் வசதி அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை