70 பயனாளிகளின் மனுக்கள் மீது கடனுதவி அளிக்க ஆய்வு
காஞ்சிபுரம்: 'டாப்செட்கோ' மற்றும் 'டாம்கோ' ஆகிய திட்டங் களில், கடன் கோரி விண்ணப்பித்த 70 பயனாளிகளின் மனுக்கள் நேற்று ஆய்வு செய்யப் பட்டன. காஞ்சிபுரம் மண்டல இணைப் பதிவாளர் அலுவலக வளாகத்தில், , 'டாப்செட்கோ' மற்றும் 'டாம்கோ' கடன் திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு, காஞ்சி புரம் மண்டல இணைப் பதிவாளர் யோக விஷ்ணு தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில், 'டாப் செட்கோ' கடன் திட்டத்தில், 52 பயனாளிகள்; சிறு பான்மையினருக்கு பொருளாதார ரீதியில் உதவும் வகையில், 'டாம்கோ' கடன் திட்டத்தில், 18 பயனாளிகள் என, 70 பேர் கடன் பெற விண்ணப்பித்து இருந்தனர். அந்த பயனாளிகளின் மனுக்களை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். இதில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் பார்த்தசாரதி, டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் திட்ட அலுவலர் உட்பட பலர் பங்கேற்றனர்.