உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உங்களை தேடி; உங்கள் ஊரில் குன்றத்துார் தாலுகா தேர்வு

உங்களை தேடி; உங்கள் ஊரில் குன்றத்துார் தாலுகா தேர்வு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமைகளில், 'உங்களைத் தேடி; உங்கள் ஊரில்' என்ற திட்டத்தின் வாயிலாக, ஒவ்வொரு தாலுகாவிலும், கலெக்டர் கலைச்செல்வி தங்கி ஆய்வு நடத்தி வருகிறார்.டிசம்பர் மாதத்திற்கான, உங்களைத் தேடி; உங்கள் ஊரில் திட்ட முகாமிற்கு, குன்றத்துார் தாலுகா தேர்வு செய்யப்பட்டு உள்ளது.குன்றத்துார் தாலுகாவில் இன்று, கலெக்டர் கலைச்செல்வி பல்வேறு அரசு அலுவலகங்களிலும், அரசு திட்டங்களையும் ஆய்வு செய்ய உள்ளார். குன்றத்துார் தாலுகா அலுவலகத்தில், மாலை 4:30 முதல் 6:00 மணி வரை, பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளார்.குன்றத்துார் தாலுகாவைச் சேர்ந்தவர்கள், தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ