உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பரந்துார் ஏர்போர்ட் திட்டத்துக்கு தயாராகிறது மாஸ்டர் பிளான்!

பரந்துார் ஏர்போர்ட் திட்டத்துக்கு தயாராகிறது மாஸ்டர் பிளான்!

பரந்துார் விமான நிலைய திட்டம் காரணமாக பாதிக்கப்படும் நான்கு கிராமங்களைச் சேர்ந்த 1,005 குடும்பங்களை மறுகுடியமர்வு செய்ய, 245 ஏக்கரில் 'டவுன்ஷிப்' ஒன்று உருவாக்கப்பட உள்ளது. இதற்கான 'மாஸ்டர் பிளான்' எனப்படும் முழுமை திட்டம் தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனம் துவக்கியுள்ளது.சென்னை, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணியர் மற்றும் சரக்கு கையாளுவது அதிகரித்து வருகிறது. எனவே, சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைக்கப்பட உள்ளது.தமிழகத்தில் முதன்முறையாக பரந்துார் விமான நிலையத்தை, தமிழக அரசு, பொது - தனியார் கூட்டு முயற்சியில் அமைக்க உள்ளது.

5,746 ஏக்கர்

இத்திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக, 'டிட்கோ' எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம் உள்ளது. பரந்துாரை சுற்றியுள்ள 20 கிராமங்களில், 5,746 ஏக்கரில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது. இதில், விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடம் இருந்து, 3,774 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.இதனால், பரந்துார் விமான நிலைய திட்டத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு, 245 ஏக்கரில் குடியிருப்பு, பள்ளி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன், 'டவுன்ஷிப்' உருவாக்கி தரப்பட உள்ளது.இத்திட்டத்திற்கு, 'மாஸ்டர் பிளான்' எனப்படும் முழுமை திட்ட அறிக்கையை உருவாக்கி தரும் பணிக்கு ஆலோசகராக, 'நைட் பிராங்' நிறுவனத்தை, 'டிட்கோ' நியமித்துள்ளது. தனியார் வசம் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணி நடக்கிறது. மொத்த நிலம் எடுக்க திட்டமிட்டுள்ள இடங்களில், நான்கு கிராமங்களில் மக்கள் வசிக்கின்றனர்.இத்திட்டத்தால் பாதிக்கப்படும், 1,005 குடும்பங்கள், சிறுவள்ளூர், மடப்புரம், மதுரமங்கலம், மகாதேவிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் மறுகுடியமர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, 245 ஏக்கரில் குடியிருப்பு, பள்ளி, குடிநீர் வழங்கல், மருத்துவமனை, சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய, 'டவுன்ஷிப்' எனப்படும் புதிய நகரம் உருவாக்கி தரப்பட உள்ளது.

பரிசீலனை

இத்திட்டத்தை செயல்படுத்த, 'மாஸ்டர் பிளான்' எனப்படும் முழுமை திட்ட அறிக்கை தயாரித்து தரும் பணிக்கு ஆலோசகரை தேர்வு செய்ய டிட்கோ, 2024 செப்டம்பரில், 'டெண்டர்' கோரியது. அதில் பங்கேற்ற நிறுவனங்களின் ஆவணங்களை பரிசீலனை செய்ததில், தற்போது 'நைட் பிராங்க்' நிறுவனம் தேர்வாகியுள்ளது. இந்நிறுவனத்திடம், மாஸ்டர் பிளான் தயாரித்து வழங்கும் ஆணை வழங்கப்பட்டு உள்ளது. அந்நிறுவனம், தன் பணிகளை துவக்கியுள்ளது. இது, இரண்டு - மூன்று கருத்துரு அடங்கிய அறிக்கையை தயாரித்து வழங்க வேண்டும். அதில் ஒன்றை தேர்வு செய்து, அதற்கேற்ப 'டவுன்ஷிப்' உருவாக்கப்பட உள்ளது. டவுன்ஷிப் உருவாக்கும் பணி முடிவடையும் வரை, நைட் பிராங்க் நிறுவனம், டிட்கோவுக்கு தேவைப்படும் ஆலோசனைகளை வழங்க வேண்டும். பரந்துார் விமான நிலைய திட்டம், நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. திட்ட செலவு, 29,150 கோடி ரூபாய். முதல்கட்ட கட்டுமான பணியை, 2026 ஜனவரியில் துவக்கி, 2028ல் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.அதற்கடுத்த ஆண்டில் இருந்து ஆண்டுக்கு, 2 கோடி பயணியரையும், இறுதிகட்ட பணிகள் முடிவடையும் போது ஆண்டுக்கு, 10 கோடி பயணியரையும் கையாளும் வகையில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

கோபாலன்
ஜன 19, 2025 20:17

பரந்தூருக்கு பதிலாக கோவையில் புதிய க்ரீண்பீல்ட் விமான நிலையத்தை அமைக்கலாம்.தற்போதைய இடம் பெரிய விமானங்களை இயக்க உகந்தது அல்ல


VENKATASUBRAMANIAN
ஜன 19, 2025 07:30

அப்படி பார்த்தால் வேளச்சேரி எப்படி ஆனது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் அபார்ட்மெண்ட் எப்படி வந்தது. தனியார் சம்பாதித்தால் பேரழிவு இல்லை. அரசு வளர்ச்சி கங்கு செய்தால் பேரழிவு. இதுதான் திராவிட மாடல் போலும்


Svs Yaadum oore
ஜன 19, 2025 07:21

பரந்தூர் விமான நிலையக் கட்டுமானங்களால் சென்னைக்கு வெள்ளம் எற்படும் அபாயம் இருப்பதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன், நடிகர் சித்தார்த், கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன் உள்ளிட்ட 30 பேர் ஒரு திறந்த கடிதத்தை எழுதியிருக்கின்றனராம் .....இப்போது இதில் ஒருத்தனும் வாயை திறக்க மாட்டான் ....ஆனால் இதுவே அ தி மு க ஆட்சி என்றால் அடிமை கூட்டம் ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என்று கூவுவானுங்க ...மானங்கெட்ட கூட்டம் ....


Svs Yaadum oore
ஜன 19, 2025 07:12

இவ்வளவு எதிர்ப்புக்கு இடையில் விடியல் திராவிடனுங்க இந்த திட்டத்தை இவ்வளவு தீவிரமாக செயல்படுத்த காரணம் என்ன ??....எல்லாம் விடியல் திராவிடனுங்க ஜி ஸ்கொயர் சம்பாதிக்கத்தான் ..விடியல் கொள்ளயடிக்கத்தான் இந்த விமான நிலையம் ...அ தி மு க ஆட்சி காலத்தில் எல்லா திட்டங்களுக்கும் எதிர்ப்பு விவசாயம் பாதிப்பு , வேளாண் மண்டலம் என்று கூவின தி மு க இப்போது இத்தனை ஏரிகளை அழித்து விமான நிலையம் கட்ட போகுதாம் ....மானங்கெட்ட விடியல் கூட்டம் ....


naranam
ஜன 19, 2025 07:09

இது வருவதற்கு இன்னும் ஐம்பது வருடங்களும் ஆகலாம்.


Suresh Kesavan
ஜன 19, 2025 06:07

ஆகப்பெரிய பேரழிவிற்கான திட்டம் .... ஐந்து உயிர் நாடி போன்ற ஏரிகளை முழுமையாக புதைக்க போகிறார்கள்... அறிவுள்ளோர் செய்யும் செயல் அல்ல இது


Laddoo
ஜன 19, 2025 08:45

அதற்கு மாற்று ஏற்பாடு செய்துதான் இத்திட்டத்தை நடத்துவார்கள். பாஜகவின் அண்ணாமலையார் ஆட்சி வந்தால் திட்டம் முழுவேகமெடுக்கும்