உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வர்ணம் பூசப்படாத வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

வர்ணம் பூசப்படாத வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம் திம்மசமுத்திரம் ஊராட்சி, பாலாஜி நகர் வழியாக, வெள்ளைகேட் மேம்பாலம் ஒட்டியுள்ள சர்வீஸ் சாலை இணையும் இடத்தில், விபத்து ஏற்படுவதை தவிர்க்க வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்படாததாலும், வேகத்தடையின் மீது, இரவில் ஒளி பிரதிபலிப்பான் ஒட்டப்படாமலும் உள்ளதால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.குறிப்பாக, இரவு நேரத்தில் இச்சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், வேகத்தடையை கவனிக்காமல் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே, வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசுவதோடு, இரவில் ஒளிரும் வகையில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை