உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மண் அரிப்பால் சாலையோர பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

மண் அரிப்பால் சாலையோர பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

செவிலிமேடு: காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, செவிலிமேடில், மண் அரிப்பால் சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலி யுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, செவிலிமேடு வழியாக, சுற்றுவட்டார பகுதிக்கு, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்கு வரத்து நிறைந்த இச்சாலையில், செவிலிமேடில் தனியார் திருமண மண்டபம் அருகில், மழையின் காரணமாக, மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, மண் அரிப்பால் சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை