முருகன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.24.87 லட்சம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில், உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 24 லட்சத்து 87,242 ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன், கோவில் செயல் அலுவலர் கேசவன் தியாகராஜன், சரக ஆய்வாளர் அலமேலு உள்ளிட்டோர் முன்னிலையில் கோவிலில் உள்ள நான்கு உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டன. இதில், 24 லட்சத்து 87,242 ரூபாய், 18 கிராம் தங்கம், 782 கிராம் வெள்ளி என, கோவிலுக்கு வருவாயாக கிடைத்தன.