உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீடுகளை சீரமைத்து தர பணம் கேட்கும் அதிகாரிகள்...பேரம்!:கண்காணிப்பு அலுவலரை நியமித்து தடுக்க நடவடிக்கை

வீடுகளை சீரமைத்து தர பணம் கேட்கும் அதிகாரிகள்...பேரம்!:கண்காணிப்பு அலுவலரை நியமித்து தடுக்க நடவடிக்கை

காஞ்சிபுரம்:சேத வீடுகளை சீரமைக்க, ஊராட்சி பணியாளர்கள், பயனாளிகளிடம் பணம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு, கண்காணிப்பு அலுவலர் நியமனத்தின் வாயிலாக தடுக்கப்படும் என, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம் உறுதியளித்து உள்ளது.காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில், 274 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளில், 2000 - 01ம் நிதி ஆண்டிற்கு முன், ஓட்டு வீடுகள் மற்றும் சாய்தள கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுத்துள்ளனர். அரசு திட்டத்தில் கட்டிக் கொடுத்த பெரும்பாலான வீடுகள், சுவர் விரிசல், கூரை என, பல்வேறு நிலைகளில் சேதம் ஏற்பட்டுள்ளன. இதை, அரசு சீரமைத்து தர வேண்டும் என, வீடு கட்டி பயன் அடைந்த பயனாளிகள் இடையே கோரிக்கை எழுந்தது.ஊரக குடியிருப்பு திட்டத்தின்கீழ், பழுது நீக்குவதற்கு சேத வீடுகளை கணக்கெடுக்கும் பணியை, கடந்த ஆண்டு ஊரக வளர்ச்சி துறையினர் துவக்கினர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,950 வீடுகள் சீரமைக்க வேண்டும். இந்த கணக்கெடுப்பின் போது விடுபட்ட 353 வீடுகள் என, மொத்தம் 2,303 வீடுகளை சீரமைக்க பயனாளிகளை தேர்வு செய்துள்ளனர்.லேசான சேதம், அதிக சேதம் என, இரு விதமான சேதங்களுக்கு ஏற்ப, அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. உதாரணமாக, லேசான சேதத்திற்கு, 32,000 - 55,000 ரூபாய் வரையும். அதிக சேதத்திற்கு, 70,000 - 1.50 லட்சம் ரூபாய் வரையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.அதன்படி, காஞ்சிபுரம் ஒன்றியத்தில், 263 வீடுகள். வாலாஜாபாத் ஒன்றியத்தில், 448 வீடுகள். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், 474 வீடுகள். குன்றத்துார் ஒன்றியத்தில், 532 வீடுகள். உத்திரமேரூர் ஒன்றியத்தில், 586 வீடுகள் மொத்தம், 2303 வீடுகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, ஓட்டு வீடுகளில, 22 சிறு சேதம் மற்றும் 163 அதிக சேதம் என, 185 வீடுகள் சேதம் ஏற்பட்டுள்ளன.அதேபோல, சாய்தள வீடுகளில், 772 வீடுகள் லேசான சேதம் மற்றும் 1,346 வீடுகள் அதிக சேதம் என மொத்தம், 2,303 வீடுகள் சேதம் ஏற்பட்டுள்ளன. இந்த வீடுகளை சீரமைக்க 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது.இந்த பணிகளை அந்தந்த பயனாளிகளே செய்துக் கொள்ளலாம். பின், பணி நிறைவு பெற்ற புகைப்படம், பயனாளிகளின் வங்கி கணக்கு எண்ணை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமர்ப்பித்தால், அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.பயனாளிகள் எடுத்து செய்ய முடியாதவர்களுக்கு உதவுவோர் என அழைக்கப்படும் ஒப்பந்ததாரர்கள் வாயிலாக செய்துக் கொள்ளலாம் என, வழி காட்டியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.வீடுகள் சீரமைக்க முடியாத பயனாளிகளிடம், சீரமைக்கும் பணி ஒப்பந்தம் எடுத்த சிலர், அந்தந்த ஊராட்சி மக்கள் நலப்பணியாளர்கள், பணி தளப்பொறுப்பாளர்களின் வாயிலாக, 5,000 - 10,000 ரூபாய் வரையில் பணம் கேட்பதாக பயனாளிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டாரத்தைச் சேர்ந்த பயனாளிகள் கூறியதாவது:சேதமடைந்த வீடுகளை சீரமைக்க பணம் இருந்தால், நாங்களே செய்துக் கொள்ளப் போகிறோம். பணம் இல்லாததற்குதானே அரசிடம் கோரிக்கை விடுத்தோம்.சேதத்திற்கு ஒதுக்கீடு செய்த பணமே குறைவாக உள்ளது. இதில், மக்கள் நலப்பணியாளர்கள் மற்றும் பணி தளப் பொறுப்பாளர்கள் வாயிலாக, முன் பணம் கேட்கின்றனர். நாங்கள் எங்கே செல்வது என, புரியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொறியாளர்களின் பரிந்துரைபடி, சேதமடைந்த வீடுகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்து, நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.பயனாளிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வாயிலாக சீரமைப்பு பணிகள் துவங்க உள்ளோம். இந்த வளர்ச்சி பணிகளை கண்காணிக்க உதவி இயக்குனர் அந்தஸ்தில் ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட உள்ளார்.புதிய கட்டுமானம் மற்றும் சேத சீரமைப்பு பணிகளுக்கு, பணம் வசூலிப்பதாக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு கண்காணிப்பு அதிகாரி வாயிலாக முற்றிலும் முற்றுபுள்ளி வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

சீரமைக்கவிருக்கும் வீடுகளின் எண்ணிக்கை விபரம்

ஒன்றியங்கள் ஊராட்சிகள் வீடுகள்காஞ்சிபுரம் 1 263வாலாஜாபாத் 14 448ஸ்ரீபெரும்புதுார் 25 474குன்றத்துார் 11 532உத்திரமேரூர் 10/ 586மொத்தம் 61 2,303


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ