உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  நடைபாதையில் வளர்ந்துள்ள செடிகளால் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

 நடைபாதையில் வளர்ந்துள்ள செடிகளால் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கையில், சாலையோரம் நடைபாதையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில் நடந்து செல்வோர் விபத்தில் சிக்குவதை தவிர்க்க சாலையோரம் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடைபாதை ஓரம் வளர்ந்துள்ள செடிகள் நீண்டு வளர்ந்துள்ளன. இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல், சாலையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, ஓரிக்கையில் சாலையோர நடைபாதை மறைக்கும் வகையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ