| ADDED : டிச 19, 2025 05:58 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு பாட்டை தெருவில், மண் திட்டுகளால் துார்ந்த வடிகால்வாயால், கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு பாட்டை தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் மற்றும் வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் கால்வாய், மண் திட்டுகளால் துார்ந்து உள்ளது. இதனால், கழிவுநீர் முழுமையாக வெளியேறாமல் கால்வாயில் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தால், கால்வாய் மூலம் மழைநீர் வெளியேறுவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. எனவே, செவிலிமேடு பாட்டை தெருவில் உள்ள வடிகால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.