கோரைப்புல் வளர்ந்த வடிகால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி, நத்தப்பேட்டையில், கோரைப்புல் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நத்தப்பேட்டை பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப் பட்டுள்ளது. இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், ஆதிதிராவிடர் நல அரசு துவக்கப்பள்ளி ஒட்டியுள்ள பகுதியில், கால்வாயில் கோரைப்புல் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ளது. இதனால், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. எனவே, நத்தப் பேட்டையில் கோரைப்புல் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.