உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

உத்திரமேரூர், -நெய்யாடுபாக்கத்தில், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. உத்திரமேரூர் தாலுகா, நெய்யாடுபாக்கம் கிராமத்தில் 'சுந்தரவடிவேலனார் சமத்துவ சமுதாய அறக்கட்டளை' சார்பில், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சுந்தரவடிவேல் 113-வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு, கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில், அறக்கட்டளை தலைவர் லெனின் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை