மேலும் செய்திகள்
ரேஷன் குறைதீர் கூட்டம்
11-Oct-2024
காஞ்சிபுரம்:உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், மாதந்தோறும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவிலும் பொதுவினியோக குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நவ., மாதத்திற்கான பொது வினியோக குறைதீர் கூட்டம், ஐந்து தாலுகாவிலும் நேற்று நடந்தது.இதில், காஞ்சிபுரம் தாலுகாவில் குண்டுகுளம் கிராமம், உத்திரமேரூரில் திணையாம்பூண்டி, வாலாஜாபாதில் நத்தாநல்லுார், ஸ்ரீபெரும்புதுாரில் மொளச்சூர், குன்றத்துாரில் மணிமங்கலம் என, ஐந்து தாலுகாவிலும் நடந்த பொதுவினியோக குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.இதில், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் எண் மாற்றம், அட்டை வகை மாற்றம் என, மாவட்டம் முழுதும் ஐந்து தாலுகாவிலும், 145 மனுக்கள் வரப் பெற்றன. இதில், தகுந்த ஆவணங்கள் இணைக்கப்பட்ட 129 மனுக்கள் மீது குறைதீர் கூட்டத்தில் உடனடியாக தீர்வு காணப்பட்டது.மீதமுள்ள 16 மனுக்கள் மீது உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி தெரிவித்தார்.
11-Oct-2024