உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை இருங்காட்டுக்கோட்டையில் அவதி

போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை இருங்காட்டுக்கோட்டையில் அவதி

இருங்காட்டுக்கோட்டை:ஸ்ரீபெரும்புதுார் அருகே இருங்காட்டுக்கோட்டையில் இருந்து அமரம்பேடு செல்லும் நெடுஞ்சாலை சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையும், குன்றத்துார்- -ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையையும் இணைக்கும் சாலையாக உள்ளது.இந்த சாலையை பயன்படுத்தி இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்சாலைக்கும், காட்டரம்பாக்கம், அமரம்பேடு, குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகன ஒட்டிகள் செல்கின்றனர். இந்நிலையில், இருங்காட்டுக்கோட்டை ஊராட்சி எல்லையில் மட்டும் இந்த நெடுஞ்சாலை ஒரு கி.மீ., துாரத்திற்கு போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இருங்காட்டுக்கோட்டையில் சேதமான சாலையை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி