உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்:பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால், காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் தாமல்வார் தெரு வழியாக கோனேரிகுப்பம், ஏனாத்துார், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் பூந்தமல்லி, சென்னை உள்ளிட்ட பகுதிக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமு ம் அதிகம் நிறைந்த இச்சாலையில், ஒரு வாரமாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, 'மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர், சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே, தாமல்வார் தெருவில், பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி