உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தீர்வை பாக்கி ஆவணங்களை திரும்ப பெற சிறப்பு முகாம்

தீர்வை பாக்கி ஆவணங்களை திரும்ப பெற சிறப்பு முகாம்

உத்திரமேரூர்,உத்திரமேரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், 73 கிராமங்களில் உள்ள பொதுமக்கள், வீடு, நிலம், மனை வாங்க, விற்கமற்றும் திருமண பதிவும் செய்து வருகின்றனர்.இந்நிலையில்,உத்திரமேரூர் சார் - பதிவாளர் அலுவலகத்திற்குஉட்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆவணதாரர்கள், கடந்த ஆண்டுக்கானமுத்திரை தீர்வை மற்றும்வட்டித் தொகையை செலுத்தாமல் உள்ளனர்.இதற்காக, வரும் பிப்., 14ல், தீர்வை பாக்கிஆவணங்களை திரும்ப பெறுவதற்கான சிறப்பு முகாம் நடக்க உள்ளது.இது குறித்து, உத்திர மேரூர் சார் - பதிவாளர் நவீன் கூறியதாவது:உத்திரமேரூர் சார் -பதிவாளர் அலுவலகத்தில், பிப்., 14ல் தீர்வை பாக்கி ஆவணங்களை திரும்பப் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடக்க உள்ளது.இதில், உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்தஆவணதாரர்கள், ஆயத் தீர்வை மற்றும் வட்டித் தொகையை செலுத்தி, தங்களது ஆவணங்களை பெற்று செல்லலாம்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை