உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உடைந்த குடிநீர் தொட்டியை மாற்ற வேண்டும்

உடைந்த குடிநீர் தொட்டியை மாற்ற வேண்டும்

கா ஞ்சிபுரம் சர்வதீர்த்த குளம் தென்கரை பகுதியில் வசிப்பவர்களுக்கு கூடுதல் குடிநீர் ஆதார மாக அப்பகுதியில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், 10 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. வீட்டு உபயோக கூடுதல் தேவைக்கு அப்பகுதியினர் குடிநீர் தொட்டி நீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு இப்பகுதியில் மேய்ச்சலுக்காக வந்த மாடுகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு குடிநீர் தொட்டியில் முட்டியதில், குடிநீர் தொட்டி உடைந்தது. இதனால், தொட்டியில் தண்ணீரை நிரப்பி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, உடைந்த நிலையில் உள்ள பழைய குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு, புதிய தொட்டி அமைக்க வேண்டும். -- - கே.ராஜசேகரன், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை