உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி சித்ரகுப்தர் கோவிலில் வரும் 10ல் திருக்கல்யாண உத்சவம்

காஞ்சி சித்ரகுப்தர் கோவிலில் வரும் 10ல் திருக்கல்யாண உத்சவம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நெல்லுக்கார தெருவில், கேது கிரகத்தின் பரிகார ஸ்தலமான கர்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பவுர்ணமியன்று, சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடக்கும்.அதன்படி நடப்பாண்டிற்கான திருக்கல்யாண வைபவம் மற்றும் வீதியுலா, வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி அன்று காலை 8:00 மணக்கு நவகலச பூஜை ஹோமம் நடக்கிறது.மாலை 6:00 முதல், இரவு 8:30 மணிக்குள் திருக்கல்யாண உத்சவமும், தொடர்ந்து வீதியுலாவும் நடக்கிறது. 12ம் தேதி, காலை 5:30 மணி முதல், இரவு 10:00 மணி வரை சித்ரா பவுர்ணமி தரிசனம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ