உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் வரும் 26ல் திருக்கல்யாண உத்சவம்

கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில் வரும் 26ல் திருக்கல்யாண உத்சவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில் உள்ள அறம்வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உத்சவம் வரும் 26ம் தேதி நடக்கிறது. காஞ்சிபுரம் அடுத்த, கிளார் கிராமத்தில், அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அறம்வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, 2018ல் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வருஷாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஏழாம் ஆண்டு வருஷாபிஷேக பெருவிழா வரும் 26ம் தேதி, காலை 8:00 மணிக்கு கோ பூஜையுடன் துவங்குகிறது. அதை தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, மஹா அபிஷேகம், யாக சாலை பூஜை, யாக வேள்வியும், காலை 8:30 மணிக்கு சங்காபிஷேகம், காலை 10:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடும் தொடர்ந்து வருஷாபிஷேகம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு அகத்தீஸ்வரருக்கும், அறம்வளர்நாயகிக்கும் திருக்கல்யாண மகோத்சவமும், தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி