உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருமுக்கூடல் கிளை நூலகத்தின் புதிய கட்டட பணிகள் தீவிரம்

திருமுக்கூடல் கிளை நூலகத்தின் புதிய கட்டட பணிகள் தீவிரம்

உத்திரமேரூர்:உத்திரமேரரூர் ஒன்றியம் திருமுக்கூடல் கிராமத்தில் கிளை நூலகம் உள்ளது. திருமுக்கூடல், புல்லம்பாக்கம், மதூர், அருங்குன்றம் உள்ளிட்ட கிராம வாசகர்கள், இந்த நூலகத்தில் உறுப்பினராக உள்ளனர். மேலும், சுற்றுவட்டார கிராம கல்லூரி மாணவர்கள், திருமுக்கூடல் உயர்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர், இந்த நூலகத்திற்கு வந்து புத்தகங்களை பெற்று செல்கின்றனர். திருமுக்கூடல் கிளை நூலக கட்டடம், சில ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து, மழை நேரங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அச்சமயங்களில் நூலகத்தில் உள்ள புத்தகங்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டது.எனவே, இந்த நூலகத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து, அவ்வப்போது நம் நாளிதழில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், திருமுக்கூடல் கிளை நூலகத்திற்கு புதிதாக கட்டடம் கட்ட 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ