உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருமுக்கூடல் பள்ளி முதல்முறையாக 100 சதவீதம் தேர்ச்சி

திருமுக்கூடல் பள்ளி முதல்முறையாக 100 சதவீதம் தேர்ச்சி

திருமுக்கூடல்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று 2024 -25ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு பொது தேர்வை மாணவ - மாணவியர் எழுதினர்.நேற்று முடிவுகள் வெளியான நிலையில், தேர்வு எழுதிய அனைத்து மாணவ -- மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதனால், திருமுக்கூடல் அரசு உயர்நிலைப் பள்ளி முதன்முறையாக 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து சாதனை பெற்றுள்ளது.இதையடுத்து தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியர், உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர் செந்தில்குமார், ஆசிரியர்களை, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் அப்பகுதி ஊராட்சி தலைவர் மஞ்சுளா ஆகியோர் நேற்று பள்ளிக்கு நேரில் சென்று பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ