உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டூ - வீலர் திருட்டு மர்மநபர் கைவரிசை

டூ - வீலர் திருட்டு மர்மநபர் கைவரிசை

உத்திரமேரூர்:காஞ்சிபுரம், மாகரல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி அமுதா, 36. இவர், கணவருக்கு பிறந்தநாள் என்பதால், இனிப்புகள் வாங்க தோழியுடன், 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில் உத்திரமேரூருக்கு சென்றார்.அங்குள்ள சவுத் ரெட்டி தெருவில் உள்ள பேக்கரி கடை முன், வாகனத்தை நிறுத்திவிட்டு இனிப்பு வாங்க கடைக்குள் சென்றார். அப்போது, வெளியே இருந்த இருசக்கர வாகனத்தை, மர்மநபர் ஒருவர் திருடினார். அமுதா அளித்த புகாரின்படி, உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை