உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குட்கா விற்ற இருவர் கைது

குட்கா விற்ற இருவர் கைது

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் அருகே, பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு புகார் வந்தது.அதன்படி, போலீசார் அப்பகுதியில் உள்ள பெட்டி கடையில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஹான்ஸ், விமல் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது.இதையடுத்து, 5,000 ரூபாய் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் மனோகரன், 60, என்பவரை கைது செய்தனர்.அதேபோல, போந்துார் கிராமம், வெட்சிப்பூ தெருவில் உள்ள கடையில் போலீசார் நடத்திய சோதனையில், 6,000 ரூபாய் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் ரமேஷ், 32, என்பவரை, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை