உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குடிநீர் பணியில் சேதமான சாலை முறையாக சீரமைக்க வலியுறுத்தல்

குடிநீர் பணியில் சேதமான சாலை முறையாக சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, திருக்காலிமேடு சின்னவேப்பங்குளக்கரையில், வாரச்சந்தை நடைபெறுமிடத்தில், கடந்த 10 நாட்களுக்கு முன், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகியது.இதையடுத்து, மாநகராட்சி சார்பில், குழாய் உடைப்பை சீரமைக்க பள்ளம் தோண்டப்பட்டு, குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது.இருப்பினும், சீரமைப்பு பணி முடிந்தும், சேதமான சாலையை பெயரளவிற்கு மண்ணால் மூடியுள்ளனர்.சாலையை சமன் செய்து முறையாக சீரமைக்கவில்லை. இதனால், பள்ளம் இருந்த இடத்தில் செல்லும் கனரக வாகனங்கள், மண்ணில் புதைந்து சிக்கும் சூழல் உள்ளது.மேலும், அப்பகுதியில் வாரச்சந்தையில் காய்கறி கடைகள் அமைக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, குடிநீர் குழாய் சீரமைப்புக்காக சேதமான சாலையை சமன் செய்து, முறையாக சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ