மேலும் செய்திகள்
கட்டட கழிவால் துார்ந்த மண்ணுார் குட்டை
21-Mar-2025
வாலாஜாபாத்,:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது புத்தகரம் கிராமம். இக்கிராமத்தில், அன்னமார் கோவில் அருகே கிராமத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பிலான பொதுக்குளம் உள்ளது. இக்குளம் ராவணன் குளம் என அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் அப்பகுதிக்கான குடிநீர் ஆதாரமாக இக்குளம் இருந்தது.மாற்று குடிநீர் ஆதாரம் ஏற்படுத்தப்பட்ட பின், அப்பகுதிக்கான நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. இக்குளம், பல ஆண்டுகளாக துார்வாரtமல் அவ்வப்போது குளத்தின் கரை பகுதி பலப்படுத்துதல் பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன.இதனால், குளம் துார்ந்து மழைக்காலங்களில் போதுமான நீர் சேகரமாகாத நிலை உள்ளது. மேலும், குளத்திற்கான வரத்து கால்வாய்களும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.எனவே, இந்த குளத்தை துார்வாரி முறையாக பராமரிக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
21-Mar-2025