உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரதராஜ பெருமாள் வனபோஜன உற்சவம் வரும் 30ல் களக்காட்டூரில் வீதியுலா

வரதராஜ பெருமாள் வனபோஜன உற்சவம் வரும் 30ல் களக்காட்டூரில் வீதியுலா

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள களக்காட்டூரில் எழுந்தருளும் வனபோஜன உற்சவம், ஆண்டுதோறும் தை மாதத்தில் நடந்து வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான வனபோஜன உற்சவம், வரும் 30ல் நடக்கிறது.உற்சவத்தையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவியருடன்வரதராஜ பெருமாள் வரும், 30ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு, கோவிலில் இருந்து புறப்பட்டு, களக்காட்டூர் கிராமத்தில் மேனாபெட்டியில்எழுந்தருளி வீதியுலாவருகிறார்.தொடர்ந்து, களக்காட்டூரில் உள்ள கரியமாணிக்க பெருமாள் கோவிலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.அங்கிருந்து புறப்பாடாகி, பாலாற்றங்கரைக்கு செல்கிறார். அங்கு,சுவாமிக்கு சிறப்புதிருமஞ்சனம், மஹாதீப ஆராதனை நடக்கிறது.மாலை 4:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, அண்ணா குடியிருப்பு, சதாவரம் மடம், புண்ணியகோட்டீஸ்வரர் தெருவில் மண்டகப்படி நடக்கிறது.இரவு 7:00 மணிக்கு, சின்ன காஞ்சிபுரம் ஸ்ரீரங்க ராஜவீதி தேசிகர் சன்னிதியில் எழுந்தருள்கிறார். இரவு 7:30 மணிக்கு அங்கிருந்து பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் புறப்பாடாகி, திருக்கோவிலுக்கு எழுந்தருள்வார்.உற்சவத்திற்கான ஏற்பாடுகளை, வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ