உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குடிநீர் சுத்திகரிப்பு மையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

குடிநீர் சுத்திகரிப்பு மையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கீழம்பி ஊராட்சியில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில், 2019- - 20 நிதியாண்டில், 7.96 லட்சம் ரூபாய் செலவில், 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.இந்த இயந்திரத்தில், 5 ரூபாய் நாணயம் செலுத்தி, குழாய் வாயிலாக 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அப்பகுதியினர் பிடித்து சென்றனர். இந்நிலையம் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்ததால், இரு மாதங்களாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது.இதனால், அப்பகுதியினர், தண்ணீர் கேன் வாங்கும் நிலை உள்ளது. லட்சணக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாடின்றி வீணாகி வருகிறது.எனவே, குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கீழம்பி கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தில் நாணயம் செலுத்தும் இயந்திரத்தையும், குடிநீர் குழாய்களையும், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் அடிக்கடி உடைத்து விடுகின்றனர்.இரு முறை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தோம். மீண்டும் குழாய் உடைக்கப்பட்டுள்ளது. இதை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை