உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / யூத் பிரீமியர் லீக் கிரிக்கெட் காஞ்சி மாணவர் இரட்டை சதம்

யூத் பிரீமியர் லீக் கிரிக்கெட் காஞ்சி மாணவர் இரட்டை சதம்

காஞ்சிபுரம்,காஞ்சிபுரத்தில் மாணவர்களுக்கான, 'காஞ்சி யூத் பிரீமியர் லீக்' கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று, காஞ்சி வாரியர்ஸ் அணியும், காஞ்சி ராயல்ஸ் அணியும் மோதின.இதில், காஞ்சி வாரியர்ஸ் அணியைச் சேர்ந்த இளையனார்வேலுார் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஹேமேஷ் குமார், 16, காஞ்சி ராயல்ஸ் அணிக்கு எதிராக 82 பந்துகளில், 203 ரன்கள் குவித்து சாதனை புரிந்துள்ளார். ஏற்கனவே, இத்தொடரில் ஒரு சதம் மற்றும் அரை சதம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் வாயிலாக ஆட்டநாயகன் விருது பெற்றார்.இதுகுறித்து ஹேமேஷ் குமார் கூறியதாவது: கிரிக்கெட் பயிற்சியாளர் வினோத் கொடுத்த பயிற்சி மற்றும் ஊக்கத்தால், 203 ரன்கள் எடுக்க முடிந்தது. பயிற்சியாளருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதுபோல், தொடர்ந்து நன்றாக விளையாடி இந்திய அணிக்காக விளையாடுவது தான் என் லட்சியம். அதற்காக, கடுமையாக உழைப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை