உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / சென்னை பைக் கொள்ளையன் நாகர்கோவிலில் சுற்றிவளைப்பு

சென்னை பைக் கொள்ளையன் நாகர்கோவிலில் சுற்றிவளைப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வாத்தியார் விளையை சேர்ந்தவர் பாரத்; தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர் தன் டூ - வீலரை கோட்டார் ரயில் நிலைய பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்தபோது காணவில்லை. போலீசார் கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, ஒரு இளைஞர் டூ - வீலரை திருடி செல்வது பதிவாகி இருந்தது. விசாரணையில், அவர் சென்னை, திருவேற்காடு மாதர்வேடு பகுதியில் வசிக்கும் அபிஷேக், 21, என்பது தெரியவந்தது. இவர், கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தை பூர்வீகமாக கொண்டவர். தொடர் விசாரணையில், திருடும் டூ - வீலர்களை ஆரல் வாய்மொழியை சேர்ந்த ஒருவரிடம் விற்பனை செய்ததாக தெரிவித்தார். தொடர்ந்து, அவரையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கைதான அபிஷேக் கைசிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !