உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / கேரள கழிவு வாகனங்கள் பறிமுதல்; 9 பேர் கைது

கேரள கழிவு வாகனங்கள் பறிமுதல்; 9 பேர் கைது

நாகர்கோவில்:கேரளாவில் இருந்து கழிவு பொருட்களை கொண்டு வந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டுவதை தடுப்பதற்காக, எல்லை சோதனைச் சாவடிகளில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைச் சாவடியை தாண்டி, கழிவு பொருள் வாகனம் வந்தால், பணியில் இருப்பவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பனச்சமூடு சோதனைச் சாவடியில், ஐந்து வாகனங்களில் கழிவு பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. ஐந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. டிரைவர் மற்றும் கிளீனர்கள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள், குமரி மாவட்டத்தில் உள்ள பன்றி பண்ணைகளுக்கு, கேரளாவில் இருந்து கழிவு பொருட்களை கொண்டு வந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து, பன்றி பண்ணைகள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி