உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / திருவள்ளுவர் சிலையில் லேசர் தொழில்நுட்பம்

திருவள்ளுவர் சிலையில் லேசர் தொழில்நுட்பம்

நாகர்கோவில்,: கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை கரையில் இருந்தபடி காண ரூ.11 கோடி செலவில் ஒலி - ஒளி காட்சிக்கூடம் அமைக்கப்படுகிறது.2006- -2011 தி.மு.க., ஆட்சியில் திருவள்ளுவர் சிலை குறித்து ஒலி ஒளி காட்சிக்கூடம் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த ஆட்சி காலத்தில் அது நிறைவேற்றப்படவில்லை. அடுத்து வந்த ஆட்சிகள் அத்திட்டத்தை கிடப்பில் போட்டன. இந்நிலையில் 2025 ஜனவரி 1ல் திருவள்ளுவர் சிலையை நிறுவியதன் வெள்ளி விழா நடக்கிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.இதற்காக கன்னியாகுமரி நகர் அழகுப்படுத்தப்பட்டு வருகிறது. கிடப்பில் போடப்பட்ட ஒலி, ஒளி காட்சிக்கூடத்தை மீண்டும் செயலுக்கு கொண்டு வர கலெக்டர் அழகு மீனா நடவடிக்கை எடுத்துள்ளார். சுற்றுலாத்துறை மூலம் ரூ.11 கோடி செலவில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் இந்த காட்சிக்கூடம் அமைகிறது.திருவள்ளுவர் சிலையின் உச்சி முதல் பாதம் வரை வண்ண லேசர் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது. பூம்புகார் போக்குவரத்துக் கழக வளாகத்தில் ஒலி ஒளி காட்சிக்கூடம் அமைக்கப் பணியும் வேகமாக நடக்கிறது. இங்கு ஒரே நேரத்தில் 100 பேர் அமர முடியும். திருவள்ளுவர் சிலையை இங்கிருந்து காண்பதுடன் மட்டுமின்றி திருக்குறள் குறித்த விளக்கங்களும் வாசகங்களும் இந்த காட்சியில் இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளி விழாவின் போது முதல்வர் இதனையும் திறந்து வைக்கவுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை