:தார்பாய் மூடாமல் செல்லும், வாகனங்களில் இருந்து விழும் ஜல்லி கற்களால் விபத்து அபாயம் உள்ளது.
வாகனங்களில் இருந்து விழும் ஜல்லி கற்களால் ஆபத்து:தார்பாய் மூடாமல் செல்லும், வாகனங்களில் இருந்து விழும் ஜல்லி கற்களால் விபத்து அபாயம் உள்ளது.கரூர்க.பரமத்தி, அரவக்குறிச்சி பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட கிரஷர் மற்றும் கல்குவாரிகள் உள்ளன. இப்பகுதியில், கல்குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்களை, கிரஷர் மூலம் அரைக்கப்பட்டு அரை, முக்கால், ஒன்றரை, சிப்ஸ் என பல வகைகளில் பிரிக்கப்படுகிறது. இங்கு, தயாரிக்கப்படும் ஜல்லி கற்களை திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், அரியலுார் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வீடு, கடைகள் கட்டுமான பணிகள், தார்சாலை அமைக்க பயன்படுத்தப்படுகிறது.தினமும் நுாற்றுக்கணக்கான டாரஸ் லாரிகள், ஜல்லி கற்களை ஏற்றி செல்கின்றன. அவ்வாறு லாரிகளில் பாரம் ஏற்றி செல்லும் போது, தார்பாய் கொண்டு மூடி செல்வது கிடையாது. லாரி வேகமாக செல்லும் போது, ஜல்லி கற்கள் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்தபடி செல்கிறது. பின்னால் வரும், இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். வாகன ஓட்டிகள் கண்களில் துகள்கள் விழுந்து கண் எரிச்சல் ஏற்படுகிறது. நிலை தடுமாறி விழும் வாகன ஓட்டிகள், பெரிய விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, ஜல்லி கற்களை சிந்தியபடி செல்லும் வாகனங்களை, கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.