உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / க.பரமத்தி அருகே அரசுபஸ் மோதி ஒருவர் பலி

க.பரமத்தி அருகே அரசுபஸ் மோதி ஒருவர் பலி

க.பரமத்தி அருகே அரசுபஸ் மோதி ஒருவர் பலிகரூர்:க.பரமத்தி அருகே, அரசு பஸ் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் உயிரிழந்தார்.கரூர்-கோவை சாலை, நெடுங்கூர் டாஸ்மாக் கடை அருகே கடந்த, 27 இரவு, 50 வயதுடைய அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற அரசு பஸ், நடந்து சென்றவர் மீது மோதியது. அதில், படுகாயமடைந்தவர் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், நேற்று முன்தினம் சிகிச்சையின் போது உயிரிழந்தார். இதுகுறித்து, க.பரமத்தி வி.ஏ.ஓ., மணிவேல், 40, கொடுத்த புகாரின்படி, க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ